சனி, 15 அக்டோபர், 2011

குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா ?


குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா ?

هل يستطيع الإنسان أن يغير أخلاقه؟
மௌலவி எம். வை. மஸிய்யா B. A.(Hons)
மனிதன் தனது குணங்களை மற்றிக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகின்ற மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். இதற்கு விடையளிப்பதில் அறிஞர்கள் மத்தியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் தென்படுகின்றன. அவை வருமாறு:

1.மனிதனால் தனது குணங்களை மாற்றிக் கொள்ள மடியாது ஏனெனில், அவை மனிதனிடம் நிரந்தரமானவை; அவை மனித இயல்புகளாகவே கருதப்படுகின்றன; அவற்றை மனிதன் தானாக மாற்றிக் கொள்ளவோ, அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவோ முடியாது என்பர் சில அறிஞர்கள்.

2.மனிதன் தனது குணங்களை மாற்றிக் கொள்ளலாம். அது அவனால் முடியாத, அசாத்த்தியமான விடயமன்று என்பர் அதிகமான அறிஞர்கள் இவ்விரு கருத்துக்களிலும், இரண்டாவது கருத்தே சரியானதாகும்.

பொதுவாக குணங்கள் இரு வகைப்படுகின்றன. அவை
அ.   மனிதனுடைய இயல்பிலேயே குடிகொண்டுள்ள குணங்கள்.
ஆ.மனிதன் தனது முயற்சி, பழக்க வழக்கங்கள், போன்றவற்றின் அடிப்படையில் தேடி அடைந்து கொள்ளும் குணங்கள்.

இஸ்லாமிய இல்லம்

 இஸ்லாமிய இல்லம்!
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்.

வீடு அமைதியின் அடித்தளம்: 
“உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை ஏற்படுத்தினான். நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் போதும், தங்கியிருக்கும் போதும் இலகுவாக நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து அவனே உங்களுக்கு ஏற்படுத்தினான். செம்மறி ஆட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து பொருட்களையும், குறிப்பிட்ட காலம் வசதி வாய்ப்புக்களையும் (ஏற்படுத்தினான்.)” (16:80)

இந்த வசனம் வீடு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்கும் அமைதியையும், பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் வழங்கும் இடமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.


வீடு கேடயம்:
பித்னாக்களின் போது வீட்டில் முடங்கி விடுவது பாதுகாப்புக்கான வழியென இஸ்லாம் கூறுகின்றது.


“யார் தனது நாவைக் கட்டுப்படுத்தித் தனது வீட்டிலேயே தங்கி விடுகின்றாரோ அவரும், யார் தனது தவறுகளை நினைத்து அழுகின்றாரோ அவரும் நற்செய்தி பெறட்டும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(தபரானீ 212)


“தனது வீட்டில் ஒருவர் அமர்ந்து அதனால் அவரது பிரச்சினையிலிருந்து மக்களும், மக்களது பிரச்சினையிலிருந்து அவரும் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அத்தகைய மனிதர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்!” என நபி(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத் 22093, தபரானீ 16485)

வியாழன், 13 அக்டோபர், 2011

மத்ஹபுகள் இயக்கங்கள் உருவாக்கிய பிரிவினைகளும் சலபி தஃவாவின் எழுச்சியும்

மத்ஹபுகள் இயக்கங்கள் உருவாக்கிய பிரிவினைகளும் சலபி தஃவாவின் எழுச்சியும்

அஷ்ஷெய்க் யஹ்யா சில்மி பின் முஹம்மது நுபார்.

பல வழிமுறைகளினால் அழைப்புப்ணியின் பெயரில் உருவாக்கம் பெற்றிருக்கும் இயக்கங்களினால் மார்க்கத்தின் ஆதாரங்கள் சுய விருப்பப்படி கையாளப்படுகிறது . இதன் போது இஸ்லாமிய கொள்கை, பிஃஹ் விடயங்கள் போன்றவற்றின் ஆதாரங்களை இவர்கள் தர்க்க வாதங்களினால் முன்வைக்கும் போது, அந்த அழைப்பாளர்களினால் ஏற்படுத்தப்படும் விளக்கங்களும் குழப்பங்களும் இஸ்லாமிய நம்பிக்கையில் பல புதிய நம்பிக்கைகளை , விளக்கங்களை உருவாக்க ஏதுவாக அமைகின்றது.

எனவே,பொதுமக்களிடையே அல்குர்ஆன் ஆயத் ஒன்றிற்கு பல விளக்கங்கள் அல்லது அஹாதீஸ்களுக்கு பல விளக்கங்களை உருவாகி அதனை இஸ்லாமிய கருத்து என்று கருதி சமூகத்தில் நடைபெறும் குழப்பங்களுக்கான காரணியாக தர்க்கங்களும் வாதங்கள் அமைந்துள்ளன.

ஸஹாபா ரில்வானுல்லாஹி அஜ்மயீன்களுடைய காலத்தினை நோக்கினால், அல்குர்ஆனிற்கும், அஹாதீஸ்களுக்கும் இவ்வாறான குழப்பங்களும் வேறுபாடான விளக்கங்களும் பிரிவுகளும் அவர்களிடையே காணப்பட வில்லை.

அல்குர்ஆனின் ஆழமான விளக்கங்களை தெரிந்தவர்களாக காணப்பட்டாலும் நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய நபி மொழியினை தெளிவாக தெரிந்தவர்களாக காணப்பட்டாலும், ஒரு வழிமுறையில் அவைகளை நிரூபிக்கும் வழிமுறையினை கையாண்டதனால் அவர்கள் வேறுபாடுகள் இன்றி காணப்பட்டார்கள்.

புதன், 12 அக்டோபர், 2011

நபிவழியில் நம் ஹஜ்

நபிவழியில் நம் ஹஜ்

 மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முன்னுரை

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் விருந்தினர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

எல்லாப்புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

”ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்ஷா அல்லாஹ் அத்தகைய பாக்கியவான்களாக நீங்களும் ஆகப்போகின்றவர்கள், ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகளை பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்விற்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாததினால் இன்று பல ஹாஜிகள் ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜை சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

அல்குர் ஆனில் சொல்லப்படும் அல் முஃமினீன் என்ற பாதையும் அது சஹாபாக்களின் பாதை என்ற விளக்க ஆதாரங்களும்

அல்குர் ஆனில் சொல்லப்படும் அல் முஃமினீன் என்ற பாதையும் அது சஹாபாக்களின் பாதை என்ற விளக்க ஆதாரங்களும்

அஷ்ஷெய்க் யஹ்யா சில்மி பின் முஹம்மது நுபார்.

அன்றைய தினம் இறக்கிய மார்க்கத்தை ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுடைய ஸஹாபாக்களும் எவ்வாறு பின்பற்றினார்களோ, அவ்வழிமுறையில் எவர்கள் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் “ஜென்னத்” சென்றடைவார்கள். அந்த வழிமுறையினைத் தவிர்ந்து அல்குர்ஆன் அஸ்ஸுன்னா என்று கூறி ஆதாரங்கள் நிருபிக்கிறோம் என்று அல்குர் சுன்னா விடயங்களை காட்டினாலும் அவர்கள் “ஜென்னத்” சென்றடைய மாட்டார்கள் என்பது ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தீர்ப்பாகும்.

இதனையே நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு முன்னால் ஒரு நேர்கோட்டினை வரைந்தார். அதன் வலதிலும் இடதிலும் பல கோடுகளை வரைந்தார். தனக்கு முன்னால் வரைந்த நேர்கோட்டில் தனது விரலை வைத்து, சூரத்துல் “அன்ஆம்” இன் 153 வசனத்தை ஓதிக் காட்டினார்.

உஸுல் அத் தஃவதுஸ் ஸலபிய்யாவும் நேர்வழியின் தனித்துவமான பண்பும்

உஸுல் அத் தஃவதுஸ் ஸலபிய்யாவும்,
நேர்வழியின் தனித்துவமான பண்பும்

அஷ்ஷெய்க் யஹ்யா சில்மி பின் முஹம்மது நுபார்.

முதன்மையாக

“ السلفية ”– என்பது, எவருடைய தனிப்பட்ட உடமையோ கருத்தோ அல்ல. இன்னும் அது எந்தவொரு

இடத்தினதும் உடமையோ கருத்தோ அல்ல. மாறாக அது நபி சல்லல்லாஹு அலைஹி

வஸல்லம் அவர்களின் அழைப்புப் பணியாகும்.

அரபு மொழியில்“ سلف ”என்றால் முன்சென்றவர்கள். அதாவது எங்களுக்கு முன் சென்றவர்களே“ سلف ”ஆகும். இவர்களுள், முதன்மையானவர்கள் – நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கல்வி கற்ற மாணவர்களான ஸஹாபா ரில்வானுல்லாஹி அஜ்மயீன்கள் ஆவார்கள். அவர்களால் இந்த மன்ஹஜ்ஜை இந்த உம்மத்தில் நிலைநாட்டுவதற்காக அன்றைய தினத்திலிருந்து ஆரம்பித்த அழைப்புப் பணியே “ الدعوة السلفية ”அத் தஃவதுஸ் ஸலபிய்யா ” ஆகும்.“ الدعوة السلفية ”வின் தலைவர் அருமை ரசூல் முகம்மது சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவார்கள். அவர்களைத் தவிர்ந்து வேறு எவருக்கும் இந்த தஃவாவிற்கு தலைவராக முடியாது. ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடிருந்த காலம் முதல் கியாமத் வரைக்கும் முகம்மது ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தலைவராவார்.

“ الدعوة السلفية ”எந்த தனி மனிதனுடைய விளக்கமோ அல்லது தனியான வழிமுறையோ அல்ல. மாறாக, நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டிச் சென்ற வழிமுறையே“ الدعوة السلفية ”ஆகும். ரசூல் சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களுடைய அழைப்பணியின் வழிமுறையினையும் அதற்கு முரணான வழிமுறையினையும், ரசூல் சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலேயே உம்மதுல் இஸ்லாமியாவிற்கு எச்சரித்து, எதிர்காலத்தில் உம்மத்துல் இஸ்லாமியாவில் தோன்றும் நபி வழிக்கு முரணான வழிகெட்ட கூட்டங்களின் அழைப்புப்பணியின் வழிமுறைகளையும் அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள்.

பிரயோசனமான கல்வியும்.. பிரயோசனமற்ற கல்வியும்...

பிரயோசனமான கல்வியும்..
பிரயோசனமற்ற கல்வியும்...

அஷ்ஷெய்க் யஹ்யா சில்மி பின் முஹம்மது நுபார்.

இஸ்லாமிய மார்க்கத்தின் (மராதிப்கள்)-தராதரங்கள் மூன்று. அவையாவன;

1.ஈமான்

2.இஸ்லாம்

3. இஹ்ஸான்

இதனையே 'ஹதீஸே ஜிப்ரீல்' என்று தொடங்கும் ஹதீஸினை உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வினவினார்கள்;

'மன் இஸ்லாம், மன் ஈமான், மன் இஃஸான்'.

இவர் ஜிப்ரீல், உங்களுக்கு உங்களுடைய தீனை கற்றுத்தர வந்தார் என்று நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹ அன்ஹு அவர்களிடம் கூறினார்கள். ( முஸ்லிம் ஹதீஸ் சுருக்கம்)

இமாம் இப்னு ரஜபல் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவர்களுடைய ஜம்பது ஹதீஸ்களை உள்ளடக்கிய நூலில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

'தீனுடைய மராதிப்' - தராதரங்கள் மூன்று.

அவையாவன; ஈமான், இஸ்லாம், இஃஸான்.

இவைகளுள் முதன்மையான படித்தரத்தினை நோக்கினால்; இவைகள் ஒவ்வொன்றிற்கும் 'ருகூன்கள்' - தூண்கள் உண்டு.

இஸ்லாத்தின் தூண்களை நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்; முதலாவது ருகூனான 'மன் இஸ்லாம்' - இஸ்லாம் என்றால் என்ன என்பதற்கு...

'அஷ்ஹது அன்லாஹிலாஹ இல்லல்லாஹ்,

வஅன்ன முகம்மதுர்ரசூலுல்லாஹ்'

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன் இன்னும் முகம்மத் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன் என்பது முதலாவது ருகூனாகும்(படித்தரமாகும்).மேலும், ஈமானுக்கு ஆறு ருகூன்கள் உள்ளன என்று நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

கஞ்சத்தனம்

கஞ்சத்தனம்

M.S.ரஹ்மத்துல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும்:

அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும்,தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான்.

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனதம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். (அல்குர்ஆன் ஆலுஇம்ரான்3 :180)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ