வெள்ளி, 2 அக்டோபர், 2009

அல்லாஹ்வின் பெயரால்


இதோ! நமது கடவுள் வார்த்தையை கேளுங்கள்!

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான் பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே சுற்றி வருகின்றன.. (திருக்குர்ஆன் 35:13)


இன்னும் அவன்தான் மனிதனை (இந்திரிய)நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான். மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்.   (திருக்குர்ஆன் 25: 53,54,55)


இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; சூரியனையோ, சந்திரனையோ வணங்காதீர்கள். இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்    (அல்குர்ஆன் 41:37)
 
நம்பிக்கைக் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின்(சாத்தானின்) அருவருக்கத்தக்க செயல்களிலு -ள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 05:90,91)